உலகம்
Budget 2021.. அலுமினிய துறையின் முக்கிய எதிர்பார்ப்பு.. பட்ஜெட்டில் நிறைவேற்றுமா அரசு..! | Budget 2021: India aluminium industry seeks govt big support

அலுமினிய துறையில் எதிர்பார்ப்பு
அதிகளவிலான இறக்குமதி காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகார்களும் சமீப காலமாகவே அதிகரித்து வருகின்றது. ஆக அதிகளவிலான, குறைந்த விலையில் இவ்வாறு அலுமினியம் ஸ்கிராப்களை இறக்குமதி செய்வதை தடுக்கவும், அடிப்படை சுங்க வரிக் கட்டணத்தினை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

அலுமினியம் அசோசியேஷன் எதிர்பார்ப்பு
உண்மையில் குறைந்த விலையில் அதிகளவிலான இறக்குமதிகள், உள்நாட்டு உற்பத்தியாளர்களை பெரும் அச்சுறுத்தி வருகின்றது. அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் 2021 – 22ல் இந்திய அலுமினியம் அசோசியேஷன் அமைப்பு, இத்துறையை ஆதரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

நிலக்கரிக்கான செஸ் வரியை நீக்க வேண்டும்
இது அலுமினியம் மட்டும் அல்ல, காப்பர், ஜிங்க், லெட், நிக்கல் உள்ளிட்ட உலோகங்களுக்கும், இந்த அடிப்படை சுங்க வரியை அதிகரிக்க வேண்டும் என்றும் இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். அதோடு அலிமினியம் போன்ற அதிக சக்தி வாய்ந்த துறைகளை ஆதரிப்பதற்காக நிலக்கரிக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை குறைக்க வேண்டும் என்றும் இத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இது மேற்கொண்டு இந்த துறையை ஊக்குவிக்கும் என இந்த துறையினர் கூறுகின்றனர்.

இதற்கு வரியை குறைக்க வேண்டும்
இந்திய அலுமினிய துறையானது அதிகளவிலான இறக்குமதியால் ஒரு சவாலான கட்டத்தில் உள்ளது. ஒரு பக்கம் அதிக இறக்குமதி, மறுபக்கம் உற்பத்தி குறைப்பு, மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பு, தளவாட செலவுகள் என அனைத்தும் இத்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஆக மூலதன பொருட்கள் இறக்குமதி மீதான வரியை திரும்ப பெறுவதனையும் இந்த துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

கோரிக்கை நிறைவேறுமா?
இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்று. அதோடு அலுமினிய துறை நாட்டின் பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும், ஆத்மா நிர்பார் திட்டத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு எரிசக்தி பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, மின்மயமாக்கல், விண்வெளி, ஆட்டோமொபைல், நீடித்த நுகர்வோர் பொருகள், பேக்கேஜிங் போன்ற பல துறைகளில் அலுமினியம் பயன்பட்டு வருகின்றது. இதன் மூலம் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆக இத்துறையினரின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொள்ளுமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.
உலகம்
நாட்டின் ஒற்றுமைக்காகப் பணியாற்றுவேன்: கமலா ஹாரிஸ் ட்வீட் | I will work to unify our country, tackle the challenges facing our nation
நாட்டின் ஒற்றுமைக்காகவும், சவால்களைச் சமாளிப்பதற்காகவும் பணியாற்ற இருக்கிறேன் என்று அமெரிக்கத் துணை அதிபராகப் பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றனர். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை நண்பகலில் பதவி ஏற்கின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நாளை முதல் நாட்டின் ஒற்றுமைக்காவும், எங்கள் தேசம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கவும், அமெரிக்காவின் வாக்குறுதியைப் புதுப்பிக்கவும் பணியாற்ற இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Starting tomorrow, @JoeBiden and I will work to unify our country, tackle the challenges facing our nation, and renew the promise of America.
மேலும், ”சூப்பர் ஹீரோக்களாக வளர வேண்டும் என்று கனவு காணும் அனைத்துச் சிறுமிகளுக்கும், சிறுவர்களுக்கும் என்னிடம் ஒரு செய்தி உள்ளது. சூப்பர் ஹீரோக்கள் நம்மிடையேதான் இருக்கிறார்கள். அவர்கள்தான் ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள்” என்று கமாலா ஹாரிஸ் பதிவிட்டுள்ளார்.
உலகம்
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..! | S&P warns of risks to banking systems of emerging markets in 2021

எந்தெந்த நாடுகளில் ஆய்வு
இது குறித்தான ஆய்வினை எஸ்& பி 15 பெரிய வங்கி அமைப்புகளுடன் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் அர்ஜெண்டினா, பிரேசில், இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

என்னென்ன பிரச்சனை
அதோடு இந்த ரேட்டிங்ஸ் நிறுவனம் மூன்று முக்கிய பிரச்சனைகளை அடையாளம் கண்டு எச்சரித்துள்ளது. அதில் முதலாவது சொத்து தர குறிகாட்டிகள் சரிவு, நிலையற்ற அரசியல் சூழல் மற்றும் உள்நாட்டு கொள்கை நிச்சயமற்ற தன்மை, மூலதனம் பாதிப்பு ஆகும்.

கொரோனா பற்றிய அச்சம்
எனினும் மத்திய வங்கிகள் பொருளாதார மீட்சி மற்றும் சாதகமான பொருளாதார நிலைக்காக வட்டி விகிதங்களை அப்படியே வைத்திருக்கலாம். எனினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றிய அச்சம் நிலவி வருகின்றது. இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு மேற்கொண்டு அச்சங்களாகவே இருந்து வருகின்றது. இது பொருளாதார வளர்ச்சியினை தாமதப்படுத்தலாம். இது வங்கிகளுக்கு பிரச்சனையாகவே அமையும் என்றும் கூறியுள்ளது.

கொரோனாவின் பரிணாமம்
இது வங்கி அமைப்புகளில் மேற்கொண்டு பிரச்சனைகளை உருவாக்கலாம் என்றும் இந்த மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு பல நாடுகளிலும் கொரோனா தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளது. எனினும் கொரோனாவின் பரிணாமம் மாறிக் கொண்டேயுள்ளது. இதன் விளைவுகள் பொருளாதாரத்தில் இருக்கலாம் எண்றும் எஸ்&பி நம்புகிறது.
உலகம்
வாஷிங்டனிலிருந்து வெளியேறுகிறார் ட்ரம்ப்: தீவில் உள்ள சொந்த இல்லத்தில் குடியேறுகிறார் | Trump to make Mar-a-Lago estate his permanent home after leaving White House
தனது பதவிக்காலம் இன்னும் சில மணி நேரங்களில் முடிந்தவுடன் வாஷிங்டனில் இருந்து வெளியேறும் அதிபர் ட்ரம்ப், புளோரிடாவில் உள்ள பாம் பீச் தீவில் உள்ள மார் ஏ லாகோ எஸ்டேட் இல்லத்தில் குடியேறுகிறார்.
வாஷிங்டனில் இருந்து ஏராளமான பொருட்களுடன் செல்லும் டிரக்குகள், பாம் கடற்கரையில் உள்ள மார் ஏ லாகோ இல்லத்தை நோக்கிச் செல்கின்றன என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்கும் சில மணி நேரத்துக்கு முன் அதிபர் ட்ரம்ப் மார் ஏ லாகோ இல்லத்துக்குச் சென்றுவிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப்பின் குளிர்கால இல்லமாக மார் ஏ லாகோ இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள டிரம்ப் டவர் இல்லத்திலிருந்து வெளிேய மார் ஏ லாகோ இல்லத்துக்கு ட்ரம்ப் குடியேறினார்.
கடந்த 1985-ம் ஆண்டு ஒரு கோடி அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்ட இந்த மார் ஏ லாகோ இல்லம் கடந்த 4 ஆண்டுகளாக குளிர்காலத்தில் ட்ரம்ப் பயன்படுத்தும் இல்லமாக இருந்து வருகிறது.
20 ஏக்கர் பரப்பளவில் மூரிஷ்-மீடிட்டேரியன் கட்டமைப்பில் 128 அறைகளுடன் கடந்த 1927-ம் ஆண்டு இந்த இல்லம் கட்டப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலைத் திறந்த வெளியில் ரசித்துக் கொண்டே குடியிருக்கும் வகையில் இந்த இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுர அடியில் கால்பந்து மைதானம், 4 டென்னிஸ் மைதானம், நீச்சல் குளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
வர்த்தக நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள மார் ஏ லாகோ எஸ்டேட்டில் யார் வேண்டுமானாலும் கோடிக்கணக்கில் பணம் செலுத்தி உறுப்பினராகி வந்து செல்லலாம்.
இங்குள்ள ஒரு தனிப்பட்ட இல்லத்தில் அதிபர் ட்ரம்ப் தனது கடைசிக்கட்ட வாழ்க்கையைச் செலவிட உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இங்குதான் ட்ரம்ப் வாழப்போகிறாரா அல்லது குளிர்காலத்துக்குப் பின் வெளியேறிவிடுவாரா எனத் தெரியவில்லை.
-
இந்தியா2 years ago
சீனாவில் தயாரிக்கும் டீவிக்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடு!
-
அரசியல்1 year ago
ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: அதிக இடங்களில் பாஜக வெற்றி; மற்ற கட்சிகள் நிலவரம் | rajasthan local body election result: bjp win more than congress | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
-
சினிமா2 years ago
மருத்துவமணையிலிருந்து என்னை வெளியேற்றி விட்டார்கள் – நடிகை விஜயலட்சுமி
-
அரசியல்2 years ago
புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும்! – மரு.அன்புமணி இராமதாசு!
-
தமிழ்நாடு1 year ago
உதயமானது மயிலாடுதுறை மாவட்டம்- Dinamani
-
அரசியல்2 years ago
சிறுமிக்கு பாலியல் தொல்லை – முன்னால் அதிமுக எம்.எல்.ஏ மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு!
-
அரசியல்1 year ago
தொழிலதிபர் to அரசியல் பணி – அர்ஜூன மூர்த்தியின் பின்னணி என்ன? | Background of Arjuna Moorthy from Business to Politics | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online
-
உடல்நலக் குறிப்புகள்2 years ago
கொரோனா தொற்று எல்லா காலத்திலும் பரவும்! – WHO